“அடுத்து இரண்டு படங்களை இயக்கி கருணாநிதியின் கையால் விருது பெற வேண்டும்” – பாரதிராஜாவின் ஆசை
என் 35 ஆண்டுகால உழைப்பில் கிடைக்காத பெயரும், புகழும் 2 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த தொடரில் கிடைத்திருக்கிறது.
நான் மூன்று முதல்வர்களிடம் பழகியிருக்கிறேன். நான் கலைஞரைப் பார்க்கும்போது அவரது நாற்காலியை பார்க்கமாட்டேன். அவர் முகத்தை, அனுபவத்தை, ஆற்றலை மட்டுமே பார்ப்பேன். கலைஞரிடம் முட்டி மோதிய காலகட்டத்தில் கூட, `நீ என்ன வேணும்னாலும் பண்ணு. என்னில் இருக்கும் உன்னை எடுக்க முடியாது` என்கிற மாதிரியே நடந்துகொண்டார். இப்படியொரு மனம் அவருக்கு மட்டும்தான் உண்டு.
அவர் என் பிள்ளைகள் திருமணத்தையும் நடத்திக் கொடுத்தவர். எனக்கு அப்பன் இல்லை. அப்பனாக இருந்து என் பிள்ளைகள் திருமணத்தை நடத்தி தந்து என்னை பெருமைப்படுத்தியவர்.
என் கலை வாழ்வில் ஒரு பதிவு வேண்டும் என்பதற்காகவே இந்த விழாவில் நீங்கள் வாழ்த்த வேண்டும் என்று அழைத்தேன். உங்கள் வாழ்த்து கிடைத்ததை என் பிள்ளைகளின் பிள்ளைகளும் அவர்கள் தலைமுறை வரைக்கும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
நான் அடுத்து ‘தென் கிழக்கு சீமையிலே’, ‘குற்றப் பரம்பரை’ என 2 படங்களை இயக்கவிருக்கிறேன். இந்த 2 படங்களும் வெளியாகி இரண்டுக்கும் உங்களிடம் விருது வாங்கவேண்டும். இதுவே என் இப்போதைய ஆசை.
இவ்வாறு பாரதிராஜா பேசினார்.
0 comments:
Post a Comment